கோலாலம்பூர், பிப் 13 – பேரா லுமுட்டில் செகரிக்கு அருகே கம்போங் தஞ்சோங் பத்துவில் , சுங்கை செம்பிட் ஆற்றில் காணாமல்போன 14 வயதுடைய சியு தருமராஜ் உடல் இன்று காலையில் மீட்கப்பட்டது. 16 வயதுடைய G. சரத் மற்றும் T. ஈஸ்வர் பிள்ளை ஆகியோரை தேடும் முயற்சி இன்று காலையில் தீவிரப்படுத்தப்பட்டது. தருமராஜ் விழுந்த இடத்திலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் அவனது உடல் மீட்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேரா இயக்குனர் சயானி சைடோன் தெரிவித்தார்.
சுங்கை செம்பிட்டில் மீன் பிடிக்கச் சென்ற அந்த மூவரும் நேற்று காணாமல் போனதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் குறித்து நேற்று மாலை மணி 3.26 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பேரா தீயணைப்பு மற்றும் மீப்புத்துறையின் உதவி இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்திருந்தார்