சிட்னி, நவ 5 – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலததில் ஒதுக்குப்புறமான பகுதியில் சிறு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அவ்விமானத்தில் இருந்த மூன்று தீயணைப்பு வீரர்கள் மரணம் அடைந்தர். உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பானிலிருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மக் கின்லேய் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்தில் இவ்வாரம் ஏற்பட்ட காட்டுத் தீயில் இருவர் மரணம் அடைந்த வேளையில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன. காட்டுத் தீயினால் அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.