இங்கிலாந்து, ஜனவரி 19 – இங்கிலாந்தில், 2 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உணவளிக்க ஆளின்றி அவரது இரண்டு வயது மகனும் பட்டினியால் இறந்தது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
60 வயதான கென்னத் (Kenneth) எனும் அந்த தந்தை தனது இரண்டு வயது மகன் பிரான்சனுடன் (Bronson Battersby), லிங்கன்ஷைர் (Lincolnshire) நகரில் வசித்து வந்தார்.
இம்மாதம் ஒன்பதாம் தேதி, குழந்தையை காண சென்ற சமூக பணியாளர் ஒருவர், எவ்வளவு தட்டியும், கதவு திறக்கப்படாததால், உரிமையாளரிடம் சாவியை வாங்கி வந்து கதவை திறந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
உள்ளே இறந்துபோன தந்தையின் உடலை கட்டியனைத்தபடி மகனும் இறந்து கிடந்ததே அதற்கு காரணம் ஆகும்.
இரு வாரங்களுக்கு முன்பே கென்னத் மாரடைப்பால் இறந்த நிலையில், உணவளிக்க யாருமின்றி பட்டினியால் குழந்தையும் உயிரிழந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.