Latestஉலகம்சினிமா

இசை பெரிதா? மொழி பெரிதா?; வைரமுத்து & கங்கை அமரன் மோதல்

சென்னை, மே 2 – திரையிசை பாடல்களில் இசை பெரிதா மொழி பெரிதா எனும் சர்ச்சை தமிழகத்தில் வெடித்து ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவிஞர் வைரமுத்து அண்மையில் ஒரு மேடையில் பேசியபோது, இசையும் மொழியும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. அதை புரிந்துக் கொண்டவர்கள் ஞானி என்றும், புரிந்துக் கொள்ளாதவர்கள் அஞ்ஞானி என்றும் கூறியிருந்தார். அவர் இசைஞானி இளையராஜாவை குறிவைத்துதான் அவ்வாறு கூறியிருக்கின்றார் என்று சர்ச்சை வெடித்தது.

அதன் பிறகு, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், வைரமுத்து திறமைசாளி என்றாலும் நல்ல மனிதர் அல்ல என சாடியிருந்தார். இளையராஜாவை மட்டம் தட்டும் பேச்சுக்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தற்போது தமிழ் திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!