Latestஉலகம்

இந்தியாவில் கைப்பேசி வெடித்ததால் பற்றி எரிந்த வீடு; 4 குழந்தைகள் பலி!

உத்தரப் பிரதேசம், மார்ச் 25 – உத்தரப் பிரதேசத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைப்பேசி வெடித்து, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உயிரழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, சார்ஜ் ஏறி கொண்டிருந்த கைப்பேசி திடீரென வெடித்த நிலையில், அந்த தீ போர்த்தப்பட்டிருந்த போர்வையில் பற்றி மளமளவென பரவியது.

இதில், 10, 8, 6 மற்றும் 4 வயது என மொத்தம் 4 குழந்தைகள உயிரழந்த நிலையில், அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கைப்பேசி சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் காரணமாகதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!