புது டெல்லி, ஜனவரி 15 – சுகாதாரப் பணியாளருக்கான தேர்வை எழுதுவதற்காக, உதட்டு சாயம் பூசி, பொட்டு வைத்து, சிவப்பு வளையல்களை அணிந்து பெண் போல ஆள்மாறட்டம் செய்த ஆடவன் ஒருவனின் செயல் அம்பலமானது.
இம்மாதம் ஏழாம் தேதி, கோட்காபுராவிலுள்ள, பாபா பாரித் அறிவியல் சுகாதார பல்கலைக்கழகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
எனினும், பசில்கா எனும் ஊரைச் சேர்ந்த அவ்வாடவன், பரிட்சை எழுத்திக் கொண்டிருக்கும் போதே கைதுச் செய்யப்பட்டான்.
பல்கலைக்கழக நிர்வாகம், “பயோமெட்ரிக்” கருவியின் உதவியுடன், அவ்வாடவன் போலி ஆதார் அட்டை எண்ணையும், போலி வாக்காளர் அட்டையையும் கொண்டு ஆள்மாறட்டம் செய்ததை எளிதாக கண்டு பிடித்தாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் அதுபோல மிகப் பெரிய அளவில் மோசடிகளை புரியும் கும்பலுடன் தொடர்புடையவன் என்ற சந்தேகம் எழுந்ததால், பல்கலைக்கழக நிர்வாகம் செய்த போலீஸ் புகாரை அடுத்து அவன் கைதானான்.
இந்நிலையில், பரம்ஜித் கவுர் எனும் பெண்ணுக்கு பதிலாக அவன் தேர்வெழுத வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணை முடிவடைந்ததும், அவர்களுக்கு எதிரான மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவுச் செய்யப்படுமென போலீசார் கூறியுள்ளனர்.