புதுடெல்லி, டிசம்பர் 28 – இந்தியாவில், திருமண விழாவின் போது, அழகிய பாரம்பரிய உடை அணிந்திருக்கும் மணமகள் ஒருவர், மணமகன் அருகில் அமர்ந்த நிலையில் லாவகமாக உறங்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சிவப்பு நிற சேலை அணிந்திருக்கும் அப்பெண், திருமணத்தின் போது நடைபெற்ற ஹவான் சடங்கின் போது உறங்கிப் போனதாக, உள்நாட்டு ஒடிசா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த சடங்கின் போது, மணமகன் எதிரில் அமர்ந்து சடங்குகளை வழிநடத்தும் பூசாரியை பார்க்கும் வேளை ; மணமகளோ மணமகன் அருகில் அமர்ந்தவாறு உறங்குகிறார்.
எனினும், சிறிது நேரத்தில் மணமகள் உறங்குவதை கண்டுகொண்ட மணமகன், அப்பெண்ணை யாரும் அறியாமல் உசுப்பி எழுப்புகிறார்.
உடனடியாக சுயநினைவுக்கு வரும் அப்பெண், தனது புடவையை சரிசெய்தவாறு சரியாக அமரும் காட்சிகள், வைரலான காணொளியில் இடம்பெற்றுள்ளது.
“இதுதான் இன்று இணையத்தை வலம் வரும் மிகச் சிறந்த காணொளி” என இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“அந்த தனித்துவமான இனிய தருணத்தை, தனது வாழ்நாள் முழுக்க மணமகன் மறக்கவே மாட்டார்” எனவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.