புதுடெல்லி, நவம்பர் 27 – பிறந்தநாளை கொண்டாடுவதற்காக துபாய்க்கு அழைத்துச் செல்ல மறுத்த கணவரின் மூக்கில் மனைவி பலமாக குத்தியதால், அவ்வாடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்தியா, புனேவிலுள்ள, வானவ்டியில், அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
கட்டுமானத் தொழில்துறை சார்ந்த தொழிலதிபரான 36 வயது நிகில் கண்ணா, அவரது 38 வயது மனைவி ரேணுகாவை கரம் பிடித்து ஆறாண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், ரேணுகாவின் பிறந்தநாளை கொண்டாட அவரை நிகில் துபாய்க்கு அழைத்துச் செல்ல மறுத்ததால், அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் மூண்டது.
அதோடு, டெல்லியிலுள்ள உறவினர்களை காண அழைத்து செல்வது தொடர்பிலும் நிகில் ஆர்வம் காட்டாததும், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் அன்பளிப்பாக விலை உயர்ந்த பரிசை வழங்காததும் ரேணுகாவை சினமடையச் செய்தது.
அதனால், அவர் பலமாக குத்தியதால், அவரது மூக்கி உடைந்து இரத்தம் பீரிட்டதோடு, பற்கள் உடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்ததை புனே போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், ரேணுகா கைதுச் செய்யப்பட்டு, விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.