ஜகார்த்தா, ஜனவரி 1 – இந்தோனேசியாவில், நீச்சல் குளத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த திருமண மேடை திடீரென இடிந்து விழுந்தது.
அதனால், அந்த மேடையில் அமர்ந்திருந்த திருமண ஜோடி நீரில் விழுந்து முற்றாக நனைந்தனர்.
அச்சம்பவம் தொடர்பான காணொளியை, திருமண ஜோடியின் ஒப்பனை கலைஞர், @fahmiirawan எனும் தனது டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்ததை அடுத்து, வைரலாகியுள்ளது.
திருமணத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள், திருமண ஜோடியை விரைந்து சென்று நீரிலிருந்து மீட்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
அச்சம்பவம், டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
எனினும், அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.