புத்ரா ஜெயா, டிச 18 – நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்துள்ள போதிலும் இப்போதைக்கு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படாது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி அஹ்மத் தெரிவித்தார்.
கோவிட் தொற்று தற்போது மலேசியாவில் அதிகரித்துள்ளதை சுகாதார அமைச்சு ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படாமல் நிலைமையை சமாளிக்க முடியும் என சூல்கிப்லி கூறினார்.
இப்போதைக்கு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லயென இன்று புத்ரா ஜெயாவில் கோவிட் -19 நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது சூல்கிப்லி கூறினார் .