Latestமலேசியா

இரண்டு முக்கிய அமைச்சுகள் நான்கு புதிய இலாக்காவாக பிரிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர் , டிச 12 – புதிய அமைச்சரவை பல இலாகாக்களில் மாற்றங்களைக் கண்டுள்ளது. அங்கு இரண்டு முன்னாள் அமைச்சகங்கள் நான்கு புதிய அமைச்சகங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் முன்னாள் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இப்போது எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சகம் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை அமைச்சகம் என பிரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சிற்கு துணைப் பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசுப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைச்சின் துணையமைச்சராக அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர்  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன் ஊராட்சி மற்றும் மேம்பாட்டு துணையமைச்சராக இருந்தார்.

இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை அமைச்சு நிக் நஸ்மி நிக் அகமட்  தலைமையில் செயல்படும். அந்த அமைச்சின் துணையமைச்சராக டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் ஸீ நியமிக்கப்பட்டுள்ளார். நிக், முன்னாள் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சராக இருந்தார்,

இதனிடையே தகவல் மற்றும் இலக்கியவியல் அமைச்சு தொடர்பு அமைச்சகம் என இரண்டு புதிய இலாகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய இலக்கவியல் அமைச்சராக கோபிந்த் சிங் தியோவும், அவருடைய துணை அமைச்சராக டத்தோ வில்சன் உகாக் கும்போங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாமி பாட்சில் தகவல் அமைச்சராகவும் , தகவல் துறை துணையமைச்சராக தியோ நீ சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் தகவல் மற்றும் இலக்கவியல் அமைச்சராக பாமி பாட்சிலும் அதன் துணையமைச்சராக தியோ நீ சிங்கும்கும் இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!