Latest

இவ்வருடம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறையை வழங்கும்படி சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனேஸ்வரன் கோரிக்கை

கோலாலம்பூர், நவ 8 – இவ்வாண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமயிலான ஒற்றுமை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. யுனேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். சீனப் பெருநாளுக்கு இரண்டு நாள் விடுறை வழங்கப்படுகிறது. நோன்பு பெருநாளுக்கும் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே நாட்டில் மூன்றாவது பெரிய இனமாக இருக்கும் இந்திய சமூகத்தினருக்கும் தீபாவளி பண்டிகையை அங்கீகரிக்கும் வகையில் அரசாங்கம் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார். அதுவும் இந்த ஆண்டே இதனை அமல்படுத்துவதற்கு பிரதமர் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வயுறுத்தினார். அதோடு மாநில ரீதியில் தீபாவளிக்கான விடுமுறையிலும் வேறுபாடு இருப்பதால் இதனை ஒருமுகப்படுத்துவற்கு கல்வி அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சு நடத்த வேண்டும் என யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!