Latestமலேசியா

இ.பி.எப்பின் புதிய கூடுதலான மீட்பு தொகை அனுமதியினால் ஓய்வு காலத்தில் போதுமான சேமிப்பு இருக்காது

கோலாலம்பூர், நவ 24 – இ.பி.எப்பின் கூடுதலான எந்தவொரு புதிய பண மீட்பு திட்டங்களும் சந்தாதாரர்கள் ஓய்வு பெறும்வயதில் அவர்களது எஞ்சிய ஓய்வுக் காலத்தில் போதுமான சேமிப்பு தொகையை கொண்டிருக்காது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சந்தாரர்களின் ஓய்வு காலத்திற்கான இ.பி.எப் தொகையின் அளவு இப்போது கவலையளிக்கும் வகையில் இருப்பதால் இலக்கு மற்றும் பண மீட்பு அனுமதி திட்டங்கள் மேலும் சிக்கலை கொண்டுவரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதோடு மக்களின் நிதி நெருக்கடிக்கு இ.பி.எப் தொகை மீட்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டால் அது தீர்வாக இருக்காது என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது நிரந்தர வருமானத்திற்காக வேலைக்கு திரும்பிவிட்டனர். கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு அவர்களது மொத்த வருமானம் அதிகரித்திருப்பதால் இ.பி.எப் தொகையை மீட்கும் திட்டத்தை தொழிலாளர்கள் நம்பியிருக்கக்கூடாது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!