Latestமலேசியா

இ-மடானி தொகையை மீட்கும் பரபரப்பு; மே பேங்க் வங்கியின் MAE செயலி முடக்கம் கண்டது

ஷா ஆலாம், டிசம்பர் 4 – அதிகமானோர் இ-மாடானி தொகையை மீட்பதற்காக விண்ணப்பம் செய்வதால், மே பேங்க் வங்கியின் MAE செயலி சேவை தடைப்பட்டது.

இன்று காலை மணி எட்டு தொடங்கி, அந்த செயலி அதிக பயன்பாட்டு நெரிசலை எதிர்நோக்கியதால், பயனர்களால் இ-மாடனி உதவித் தொகையை பெற இயலவில்லை.

அந்த பிரச்சனைக்கு தீர்வுக் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மே பேங்க் வங்கி, பயனர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதோடு, சேவை தடையால், சிரமத்திற்கு இலக்கான பயனர்களிடம், முகநூல் பதிவு வாயிலாக அது மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!