சுங்கை பெட்டாணி, நவம்பர் 29 – கெடா, சுங்கை பெட்டாணி, தாமான் கெலாடியில், இ-ஹெய்லிங் ஓட்டுனர் ஒருவரின் இடது மார்பில் கத்தியை வைத்து மிரட்டியது தொடர்பில் கைதுச் செய்யப்பட்ட 13 வயது இளைஞன், போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை அரசாங்க துணை வழக்கறிஞர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே, மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படுமென குவாலா மூடா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஜைடி செ ஹசான் தெரிவித்தார்.
கட்டணம் தொடர்பில் எழுந்த வாக்குவாதம் காரணமாக, 65 வயது இ-ஹெய்லிங் ஓட்டுனரின் மார்பில் கத்தியை வைத்து மிரட்டிய 13 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன், கைதுச் செய்யப்பட்டது தொடர்பில் நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அந்த இளைஞனின் கையில் இருந்த கத்தியை பிடுங்கியதோடு, அவனது கையை கடித்து இ-ஹெய்லிங் ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டதால், அவன் அஞ்சி தப்பி ஓடி விட்டதாக கூறப்பட்டது.
எனினும், அதே நாள் இரவு மணி பத்து வாக்கில் அவன் கைதுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.