Latestமலேசியா

ஈப்போவில் கால்நடைகளை வேட்டையாடிய புலி பிடிப்பட்டது

ஈப்போ, பிப் 11 – ஈப்போவில் உலு குவாங் பகுதியில் 156 கிலோ கிராம் எடை புலியை வனவிலங்கு துறையினர் பிடித்துள்ளனர்.

புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், வனவிலங்கு துறையினர் வலை வீசி நோட்டமிட்ட நிலையில், அந்த புலி ஏற்கனவே விழுங்கிய மாட்டின் சடலத்தையே பொறியாகப் பயன்படுத்தி, அந்த புலியை காலை 11 மணியளவில் பிடித்திருப்பதாக, பேராக் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்களின் உதவி இயக்குனர் நோர் ஹனி அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.

தற்போது, அகப்பட்டுள்ள அந்த புலியை சுங்காயில் அமைந்துள்ள தேசிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!