ஈப்போ, பிப்ரவரி 23 – ஈப்போவில் உள்ளிருந்து பூட்டிக் கொண்டு காருக்குள் அடுப்புக் கரியை எரியூட்டதாக நம்பப்படும் ஆடவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
நேற்று நள்ளிரவு Taman Rapat Indah-வில் உள்ள வீட்டொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து அங்கு விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, பூட்டிய Perodua Myvi காரின் கதவைச் சிறப்புக் கருவிகளைக் கொண்டு திறந்து அந்நபரை மீட்டது.
அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்கள் முதலுதவிச் சிகிச்சை கொடுத்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட ஆடவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைப் பூட்டிக் கொண்டு உள்ளே அடுப்புக் கரியை அவர் எரியூட்டியதற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.