ஈப்போ, டிச 6: சக மனிதர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை உறுதியாகப் பற்றிக்கொண்டு இனம், மதம் பாராமல் ஈப்போ, Raja Permaisuri Bainun (HRPB) மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரியும் ஆர். யோகேஸ்வரிக்கு இம்மாதம் டிசம்பர் 19ஆம் திகதி பேரரசரின் மனிதநேயச் சேவைக்கான தேசிய விருது பரித்துரைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சனை, மனச்சோர்வுடன் வரும் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தக்க நேரத்தில் அவ்வப்போது தேவைப்படும் சிறு உதவிகள், தேவைப்படும் தகவல்களை யோகேஸ்வரி வழங்கியது அங்கு வருபவர்களை பெரிதும் கவர்ந்து, பலரது பாராட்டையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடயே தனக்கு இவ்விருது கிடைக்க காரணமாக இருந்த மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், பெண்கள் குறிப்பாக பிரசவிக்க வந்த பெண்கள், வாகன நிறுத்துமிடத்தில் அவர் சந்தித்த தந்தைமார்களுக்கும் யோகேஸ்வரி தனது முகநூல் பக்கத்தில் நன்றிகளை பகிர்ந்துள்ளார்.
தற்போது அவர் அம்மருத்துவமனையில், முதியோர்களுக்கான மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கான சிகிச்சைப் பிரிவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இதனிடையே தனது அப்பதிவில் அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, யோகேஸ்வரிக்குக் கிடைக்கும் இந்த விருதுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருவதோடு தங்களுக்கு யோகேஸ்வரி எப்போது உதவி செய்தார் என்ற விவரத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.