![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-26-at-7.00.26-PM-780x470.jpeg)
ஈப்போ, டிச 26 – எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி ஈப்போ கல்லுமலை தைப்பூச விழா திட்டமிட்டபடி நடைபெறும் என பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்திருக்கிறார். ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா நிர்வாகத்தின் கீழ் எழுந்துள்ள இருதரப்பு உட்பூசலினால் தைப்பூச விழாவை ஏற்று நடத்துவது என்ற சர்ச்சை எழுந்துள்ளதால் ஈப்போ தைப்பூச விழா நடைபெறாது என்று சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
அதனை யாரும் நம்பவேண்டாம் , வழக்கம்போல் ஆலயம் செயல்படும் பக்தர்கள் முறையே தங்களின் காணிக்கைகளை நிறைவேற்ற ஆலயத்திற்கு வரலாம் என்று மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேரா அரசாங்கத்தின் மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ. சிவநேசன் விளக்கம் அளித்தார்.
முன்னதாக சிவநேசனை ஈப்போ இந்து தேவஸ்தான உறுப்பினர்கள் சிலர் சந்தித்து ஈப்போ இந்து தேவஸ்தான விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.