தமிழகம், மார்ச் 14 – இந்தியா, தமிழகத்தில், ஈராயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, அந்நாட்டின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என கூறப்படும் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பன் சதா கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்றிரவு சதா கைதுச் செய்யப்பட்டதாகவும், அவனை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, போதைப் பொருள் கடத்தல் தொடர்பில், அவன் எங்கெல்லாம் சொத்துகளை குவித்து வைத்துள்ளான், வேறு யாருக்கும் அந்த கடத்தலுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
முன்னதாக, ஈராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்கை அவரது வழக்கறிஞர் பிரபாகரன் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் சுமார் 20 நிமிடம் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
24 மணி நேரமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் நலமாக இருப்பதாகவும், விரைவில் குடும்பத்தாரை சந்திக்க அவர் விரும்புவதாகவும், அவரது வழக்கறிஞர் பிரபாகரன் கூறியுள்ளார்.