புதுடெல்லி, பிப் 28 – உடலை கட்டழகாக்க வைத்திருப்பதற்கு நாணயங்களையும் காந்தங்களையும் இளைஞர் ஒருவர் விழுங்கிய விபரீத சம்பவம் ஒன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
‘Body Building’-கில் ஆர்வம் கொண்டிருந்த அந்த இளைஞன், துத்தநாகம் சத்து எனும் zinc உடற்கட்டை உருவாக்க உதவும் என்று கருதி நாணயங்களையும் காந்தங்களையும் விழுங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த இளைஞன் 20 நாட்களுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னரே அவரின் உறவினர்களின் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அவற்றை உட்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அனைத்து நாணயங்களும் காந்தங்களும் அகற்றப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் நோயாளியான அந்த 26 வயது இளைஞரின் குடலில் இருந்து 39 நாணயங்களையும் 37 காந்தங்களையும் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.