புத்ரா ஜெயா, மார்ச் 2 – காஸாவில் உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலை மலேசியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற அந்த கொடூரமான சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வேளையில் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர். மிகவும் பலவீனமான நிலையில் சோர்ந்து காணப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை படுகொலை செய்தது குறித்து மலேசிய அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
பெண்கள், மற்றும் சிறார்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட அந்த தாக்குதல் கடுமையான கண்டிக்கப்படக்கூடியது என மலேசியா தெரிவித்துள்ளது. இது அனைத்துலக சட்டம் மற்றும் அனைத்துலக நீதிமன்றத்திற்கு எதிரான தெளிவான விதிமீறல் என்றும் மலேசியா தெரிவித்துள்ளது.