Latestஉலகம்

உம்ரா முடித்து மலேசியா திரும்பும் வழியில் விமானத்தில் மாது மரணம்

சென்னை, பிப்ரவரி 26 – உம்ரா யாத்திரை முடிந்து, துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கோலாலம்பூர் வந்துக் கொண்டிருந்த 57 வயது மலேசிய மாது, மாரடைப்பால் மரணமடைந்தார்.

நடுவானில் நெஞ்சு வலியால் துடித்து, திடீரென அம்மாது மூர்ச்சையானதால் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.

அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டும், அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

சவப்பரிசோதனைக்குப் பிறகு அவரின் உடல் மலேசியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!