Latestமலேசியா

உரிமை கோரப்படாத பணம் ; 10 ஆண்டுகளுக்கு பின் அரசாங்கத்தின் வருவாய் கணக்கில் சேர்க்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 12 – 1965-ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத பணம் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அமலுக்கு வந்தால், பத்தாண்டுகளுக்கு பிறகு கோரப்படாத பணத்தை வருவாயாக எடுத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கும்.

தற்சமயம் உரிமை கோரப்படாத பணம் ஒருங்கிணைந்த அறக்கட்டளை கணகில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, அறக்கட்டளை நிதியின் கீழ் கோரப்படாத அந்த பணம் ஒருங்கிணைந்த வருவாய் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

எனினும், 1965-ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத பணம் சட்டத்தின் 11-வது பிரிவுக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் அமலுக்கு வந்தால், அந்த 15 ஆண்டுகள் கால அவகாசம் பத்தாண்டுகளாக குறைக்கப்படும்.

அந்த சட்ட திருத்த மசோதாவை, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் நேற்று முதல் வாசிப்புக்காக மக்களவையில் தக்கால் செய்தார்.

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்திலேயே, அந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!