கோலாலம்பூர், பிப் 19 – மலேசியா உட்பட உலகம் முழுவதிலும் சீன சமூகத்தின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக ம.சீ.ச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்திருக்கிறார்.
உலகின் பல பகுதிகளில் சீனர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லையென துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் டத்தோ Teng Gaik Kwan மையத்தை தொடக்கி வைத்துபோது வீ கா சியோங் இத்தகவலை வெளியிட்டார்.
சீனர்களின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு அவர்களது பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதே முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார். மலேசியாவிலும் இன்று இந்த நிலைத்தான் நீடிக்கிறது.
இன்றைய இளம் தம்பதியர் தங்களது பிள்ளைகளை கவனித்துக் கொள்வதிலும் பராமரிப்பதிலும் சவால்களை எதிர்நோக்குவதே பிறப்பு விகிதம் குறைந்ததற்கு மற்றொரு காரணம் என்றும் வீ கா சியோங் தெரிவித்தார்.