Latestமலேசியா

உள்ளங்கை அளவில் புலியின் கால் தடம் கண்டுபிடிப்பு; குவா மூசாங் மக்கள் பீதி

குவா மூசாங், நவம்பர் 16 – கிளந்தான், குவா மூசாங், கம்போங் செபெராங் லெம்பாகா (Kampung Seberang Lembaga) தோட்ட மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர்.

அதற்கு, அப்பகுதியில், ஒரு நபரின் உள்ளங்கை அளவில், புலியின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே காரணம் ஆகும்.

அச்சம்பவம் தொடர்பில், PERHILITAN – தேசியப் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, 48 வயது கிராமத் தலைவர் நோர்டின் மாட் யூசோப் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியை சோதனையிட்ட PERHILITAN அதிகாரிகள் அந்த கால் தடத்தை அடையாளம் கண்டதாக, நோர்டின் சொன்னார்.

அந்த புலியை பிடிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள வேளை ; இரப்பர் மரம் வெட்ட செல்பவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட புலி தாக்கி அண்மையில் நபர் ஒருவர் காயமடைந்த வேளை ; கிராமத்தில் புகுந்து அந்த புலி கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!