Latestமலேசியா

என் பெயரை சீர்குலைக்கும் முயற்சியில் அன்வார் – எம்.ஏ.சி.சி துன் டைய்ம் சாடல்

கோலாலம்பூர், டிச 28 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி ‘MACC’ தமது பெயரை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் தெரிவித்திருக்கிறார்.

லஞ்ச ஊழல் , சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் அண்மையில் துன் டைய்ம் குடும்பத்திற்கு சொந்தமான இல்ஹாம் கட்டிடத்தை பறிமுதல் செய்தது தொடர்பில் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையாளர் அசாம் பாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பதவி வேறுபாடு எதுவுமின்றி எம்.ஏ.சி.சியின் விசாரணை இருப்பதாக அன்வார் இதற்கு முன் கூறியிருந்தார். எழுத்துபூர்வமாக பலமுறை எழுதிக் கேட்டும் தாம் செய்த தவறு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லையென டைய்ம் கூறியிருந்ததாக அஸ்ட்ரோ அவானி
தெரிவித்திருந்தது. தமக்கு எதிராக அடிப்படையற்ற , தவறான தகவல்கள் மற்றும் தமது பெயரை சீர்குலைக்க திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துன் டைய்ம் கூறினார்.

தாமும் தமது குடும்பத்தினரும் எந்தவொரு லஞ்ச ஊழலிலும் சம்பந்தப்படவில்லையென டைய்ம் கூறினார். அரசியல் காழ்ப்புணர்வு அதுவென அவர் தெரிவித்தார். மேலும், விசாரணை நடைபெறும் வேளையில் அது குறித்து அசாம் பாக்கி கருத்துரைத்தது அவர் தொழில் நிபுணத்துவத்தை பின்பற்றவில்லை என்றும் டைய்ம் கூறினார்.

என் மீதான தவறு அல்லது குற்றச்சாட்டு என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில் தாம் எந்தவொரு பதிலையே அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக டைய்ம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!