Latestஉலகம்

எல்லை மீறிய பகடி வதை; சீனாவில் மலத்தை உண்ணச் சொல்லி மாணவர் சக மாணவரால் சித்ரவதை

பெய்ஜிங், நவ 4 – சீனா, பெய்ஜிங்கில் மாணவர் ஒரு மற்றொரு சக மாணவரால் இடைநிலைப் பள்ளியின் கழிவறையில் மலம் உண்ணச் சொல்லி பகடிவதை செய்யப்பட்ட சம்பவம் பலரின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் காணொளி பகடி வதை செய்த மாணவரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இது அம்பலமாகியுள்ளது.

முதலில் பல மாணவர்கள் சுற்றி இருக்க, மலத்தை உண்ணச் சொல்லி அம்மாணவர் துன்புறுத்தப்படுகிறார். பின்னர் இதர மாணவர்கள் கழிவறையிலிருந்து வெளியேற்றப்பட்டு மலம் உண்ண வற்புறுத்தப்படுகிறார் அம்மாணவர்.

இதனிடையே, இச்சம்பவத்தை தொடர்ந்து, பகடி வதை செய்த மாணவருக்கு எதிராக போலிசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் முயன்று வருகிறது.
இவ்விவகாரம் வலைத்தளவாசிகளிடையே பெரும் கண்டத்த பெற்றுள்ளதோடு, பகடி வதை செய்த மாணவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!