கோலாலம்பூர், பிப் 13 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சிகிச்சைக்காக ஐ.ஜே.என் (IJN) தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் துணைப்பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக அவர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தம்மை குட்டி என்று கூறியதற்காக ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக மகாதீர் தொடுத்திருந்த அவதூறு வழக்கு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. ஜனவரி 26ஆம் தேதி முதல் மகாதீர் ஐ.ஜே.என்னில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி அவரது வழக்கறிஞர் மியோர் நோர் ஹைடிர் சுஹைமி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். மேலும் இன்றைய விசாரணையில் கலந்து கொள்ளும் வகையில் மகாதீரின் உடல் நிலை இல்லையென்றும் மருத்துவமனையும் கடிதம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு நீதித்துறை ஆணையர் கான் டெச்சியாங் அனுமதி வழங்கினார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
6 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
7 hours ago