Latestமலேசியா

கல்வி அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்படும்

ஈப்போ, நவ 8 – கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்கிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த ஆடவனுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படை துணைத்தலைவர் கமிஷனர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்திருக்கிறார். குற்றவியல் சட்டத்தின் 507ஆவது விதி ,1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் 28 வயதுடைய சந்தேக பேர்வழி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். சம்பந்தப்டட சந்தேகப் பேர்வழிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவதற்காக விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் MCMC எனப்படும மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமிருந்து தடயயியல் அறிக்கையையும் பெறும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!