Latestமலேசியா

கழுத்தறுத்துக் கொலை? சிரம்பானில் ஆடவரின் சடலம் புதரில் கண்டெடுப்பு

சிரம்பான், ஏப்ரல்-22,

நெகிரி செம்பிலான், சிரம்பானில் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட தடயங்களுடன் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Jalan Seremban-Port Dickson சாலையின் 10-வது கிலோ மீட்டர் அருகே, பேருந்துக்குக் காத்திருக்கும் இடத்தின் புதரில் சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.

41 வயது அந்நபர் கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேக்கிறது.

சடலத்திற்கு அருகே, அவரின் பெயரில் பதிச் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், ஹெல்மட், செருப்பு மற்றும் கைக்கடிகாரமும் கண்டெடுக்கப்பட்டன.

எனினும் தனிப்பட்ட ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை.

கழுத்தில் ஏற்பட்ட காயத்தாலே அந்நபர் உயிரிழந்தது சவப்பரிசோதனையிலும் உறுதிச் செய்யப்பட்டது.

அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவும்படி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!