Latestமலேசியா

காரை மணல் லோரி மோதித் தள்ளியது; இரு பெண்கள் பலி

பொக்கோ செனா, டிசம்பர் 4 – கெடா, பொக்கோ செனாவில், நான்கு வாகனங்களை உட்படுத்திய கோர விபத்தில், இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவ்விபத்து நேற்று காலை மணி 9.55 வாக்கில் நிகழ்ந்தது.

அதில், 65 வயது ரோமாடியா இஸ்மாயிலுன், 28 வயது நட்சிபா அபு செமானும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்கள் பயணித்த புரோடுவா பெஸ்ஸா காரை, 10 டன் மணல் லோரி ஒன்று மோதித் தள்ளியதாக நம்பப்படுகிறது.

பின்னர், அவ்விரு வாகனங்களையும், புரோடுவா அக்சியா மற்றும் தோயோதா Hilux வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

அவ்விபத்து குறித்து பெறப்பட்ட அவசர அழைப்பை தொடர்பு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கிக் கொண்டிருந்த மூவரை மீட்டதாக, கெடா மாநில தீயணைப்பு மீட்புப் படையின் பிரிவு ஒன்றுக்கான தலைவர் அஹ்மாட் அமினுடின் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வேளை; காயமடைந்தவர்கள் உடனடியாக அலோர் ஸ்டார் சுல்தானா பயியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!