Latestமலேசியா

கார் கவிழ்ந்து விரைவு பஸ்ஸில் மோதியது; இருவர் மரணம்

ரந்தாவ் பஞ்சாங், ஜன 19 – கார் ஒன்று கவிழ்ந்து விரைவு பஸ்ஸில் மோதியதில் அக்காரில் பயணம் செய்தவர்களில் பெண்மணியும் பஸ் ஓட்டுனரும் மரணம் அடைந்தனர். ஜாலான் ரந்தாவ் பஞ்சாங் – பாசிர் மாஸ் சாலையில் அதிகாலை மணி 4.50 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த விரைவு பஸ் ஓட்டுனர் மற்றும் ஹோண்டா அக்கார்டு காரில் முன்புறம் அமர்ந்திருந்த பயணியான 22 வயதுடைய நூருல் சுஹைலா முகமட் ஓத்மன் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் அந்த ஹோண்டா அக்கார்டு கார் ஓட்டுனரான ஆடவர் ஒருவர் காயம் அடைந்தாக பாசிர் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி அஸ்மி ஜாபர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!