Latestவிளையாட்டு

காற்பந்தாட்டத்தில், முதல் முறையாக நீல அட்டை அறிமுகம்; வலுக்கும் எதிர்ப்பு

லண்டன், பிப்ரவரி 9 – காற்பந்தாட்டத்தின் போது, ஆட்டக்காரர்களுக்கு நீல அட்டை வழங்கி அவர்களை தற்காலிகமாக ஆட்டத்தை விட்டு வெளியேற்றும் நடைமுறையை, காற்பந்து இரசிகர்கள், பிரீமியர் லீக் மேலாளர்கள் மற்றும் முன்னாள் ஆட்டக்காரர்கள் ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர்.

அந்த நடைமுறை, நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், ஆட்டத்தை சலிப்படையச் செய்யும் எனவும், அர்செனல் ஜாம்பவான் பால் மெர்சன் கூறியுள்ளார்.

அந்த நீல அட்டை பயன்பாட்டுக்கு, இதற்கு முன் டோட்டன்ஹாம், எவர்டன், கிரிஸ்டல் பேலஸ் போன்ற இங்லிஷ் பிரீமியர் லீக் மேலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

VAR வீடியோ தொழில்நுட்பம் மீதான விவகாரத்திற்கே இன்னும் தீர்வுக் காணப்படாத நிலையில், இந்த நீல அட்டை அறிமுகம் ஆட்டக்காரர்களையும், மேலாளர்களையும் சினமடையச் செய்யுமென, பிரீமியர் லீக் தலைவர் டோனி ஸ்கோல்ஸும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்றைய ஆட்டத்தின் போது, சர்வதேச காற்பந்து சம்மேளனம், கூடுதல் நீல அட்டைகளை அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிறிய குற்றங்களுக்காக அந்த அட்டை வழங்கப்படும் ஆட்டக்காரர் ஒருவரை, பத்து நிமிடங்களுக்கு ஆட்டத்தை விட்டு வெளியேற்ற நடுவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கடுமையாக நடந்து கொள்ளும் அல்லது நடுவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆட்டக்காரர்களுக்கு அந்த நீல அட்டை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

1970-ஆம் ஆண்டு தொடங்கு, உலக கிண்ண காற்பந்தாட்டத்தில், மஞ்சள், சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டு வரும் வேளை ; இவ்வாண்டு முதல் முறையாக புதிய நீல அட்டை அறிமுகம் காணவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!