ஜெருசலம் , டிச 31 – காஸா முனை மற்றும் எகிப்துக்குமிடையிலான எல்லை மண்டலம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீன மறைவிடங்கள் மற்றும் இதர வட்டாரங்களில் உள்ள தரப்புகளுடனான போர் மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என அவர் கூறினார். காஸாவிலுள்ள ஆளும் ஹமாஸ் தரப்புகளுடனான இஸ்ரேல் போர் 13ஆவது வாரமாக நடைபெற்று வருவதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்செயலை இது ஏற்படுத்தியுள்ளதோடு லெபனான், சிரியா மற்றும் ஏமனிலுள்ள ஈரான் ஆதரவிலான தரப்புகளும் தாக்குதலை நடத்தி வருவதாக நெதன்யாகு தெரிவித்தார். தென் காஸா பகுதி எங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அந்த எல்லை மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.