![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-04-Jul-2024-08-06-PM-3737.jpg)
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4 – கிளந்தானில், ஒரு வயது 11 மாத பெண் குழந்தையிடம், ஆபாசமாக நடந்து கொண்ட லோரி ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
நீதிபதி முன்னிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 32 வயது முஹமட் ஜுல்ஹஜார் இப்ராஹிம் (Mohamad Zulazhar Ibrahim) எனும் அவ்வாடவன், அதனை ஒப்புக் கொண்டான்.
ஜூன் 26-ஆம் தேதி, இரவு மணி ஒன்பது வாக்கில், பாசிர் தும்பாட் லிம்பாட்டிலுள்ள, வீடொன்றில், அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையுடன், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அவ்வாடவனை உத்தரவாததின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கவில்லை. இவ்வழக்கு விசாரணை ஜூலை 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.