கிள்ளான், டிசம்பர் 27 – காதலியை கொலை செய்ததாக நம்பப்படும், பழ வியாபாரி ஒருவனுக்கு எதிராக இன்று சிலாங்கூர், கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், 44 வயது கூ சூன் ஹெங் எனும் அந்த ஆடவனிடமிருந்து, இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
டிசம்பர் 18-ஆம் தேதி, பிற்பகல் மணி ஒன்று வாக்கில், தாமான் பாயு, ஜாலான் பாயு திங்கி லீமாவில், 26 வயது கோ சீ லிங் எனும் பெண்ணை கொலை செய்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 12 பிரம்படிகளுடன் கூடிய 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை அடுத்தாண்டு, மார்ச் முதலாம் தேதி செவிமடுக்கப்படும்.