
ஜோகூர் பாரு, மே 15- கடந்த வாரம் மே 9-ஆம் தேதி, ஜோகூரிலுள்ள இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையில் (Second Link Expressway) நடந்த விபத்தில், ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்குக் காரணமான சிங்கப்பூர் மசெராட்டி (Maserati) வாகன ஓட்டுநர், நீதிமன்றத்தில் இன்று தன் குற்றத்தை மறுத்துள்ளார்.
27 வயதான இர்ஷாத் அப்துல் ஹமீத் (Irshad Abdul Hameed), சாலை விதிகளுக்கெதிராக யு-டர்ன் (U-turn) செய்யும்போது, தலை மற்றும் இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, 32 வயதான ஏ. வசந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது குற்றத்தை மறுத்துள்ள இர்ஷாத்திற்கு 12,000 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்பட்டதோடு, அவருடைய ஓட்டுநர் உரிமத்தை (licence) தற்காலிக இடைநிறுத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கை மீண்டும் பரிசீலித்து, தக்க ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் ஜூன் 10 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.