
கோலாலம்பூர், ஜூன்-2 – தான் ஓட்டிச் சென்ற முழு மின்சார SUV வாகனம்
நெடுஞ்சாலையில் திடீரென நின்று போய் பரப்பரப்பான நிமிடங்களை எதிர்கொண்ட அதன் உரிமையாளர், அவ்வாகனத்தைத் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
முழுக் கடனையும் திருப்பிப் செலுத்தும் full settlement அடிப்படையில் அந்த BYD Atto 3 வாகனத்தை 33 வயது இஸ்வான் ஹசான் திரும்ப ஒப்படைத்தார்.
இந்த full settlement டை BYD Sime Motors முழுமையாக ஏற்றுக் கொண்டது.
இதுவரை மாத தவணைப் பணத்தை கட்டி வந்திருப்பதால் சிறிய நட்டம் ஏற்பட்டாலும், குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி வாகனத்தைத் திருப்பித் தர தாம் முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
இஸ்வான் 10 மாதங்களுக்கு முன்னர் தான் அந்த SUV மின்சாரக் காரை வாங்கினார்.
இந்நிலையில் மே 1-ஆம் தேதி மலாக்காவிலிருந்து பினாங்கு திரும்பும் வழியில் செராஸ் – காஜாங் நெடுஞ்சாலையில் கார் திடீரென நின்றுபோனது.
வலப்புறப் பாதையில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது திடீரென கார் நின்றதால் இஸ்வானும் குடும்பத்தாரும் பதறிப்போயினர்.
எந்த முன்னறிவிப்புமின்றி ஏழே வினாடிகளில் கார் சொந்தமாக பிரேக் போட்டது dashcam மில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் காரோட்டுநர் பக்கமுள்ள கதவின் sensor பிரச்னையே அச்சம்பவத்திற்குக் காரணம் என பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
வாகனங்களை வாங்குவதற்கு முன் மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டுமென்பதை இச்சம்பவம் தனக்கு பாடமாக உணர்த்தியுள்ளதாக இஸ்வான் கூறினார்.
வலைத்தளவாசிகளும், EV வாகனங்களின் தானியங்கி முறையின் பாதுகாப்பு அம்சம் குறித்து கவலை எழுப்பினர்.
கோளாறு ஏற்பட்டால் எந்த முன்னறிவிப்புமின்றி அந்த தானியங்கி முறை செயல்படுவதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.