குவாலா திரங்கானு, மார்ச் 21 – பாலியல் நடவடிக்கைகாக பெண் ஒருவரை கடத்தியதாக, ஆசிரியர் மற்றும் சொந்த தொழில் செய்யும் நபர் ஒருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், 48 வயது ஹஸ்பியானிசம் மன்சோர் எனும் அந்த ஆசிரியர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்த வேளை ; அதே குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 29 வயது பாஸ்லி ஜாபார் எனும் ஆடவன் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து, இம்மாதம் 11-ஆம் தேதி, அதிகாலை மணி 2.35 வாக்கில், ஜாலான் சுல்தான் ஓமாரிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
ஹஸ்பியானிசமுக்கு எதிரான வழக்கு விசாரணை, மார்ச் 31-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.