குவாலா திரங்கானு, ஜனவரி 16 – திரங்கானு, குவாலா திரங்கானு, மானிரில், ஆடவர் ஒருவரின் சடலம் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை மணி 4.45 வாக்கில், சம்பந்தப்பட்ட வடிகாலில் சிற்பிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் சிலர், 39 வயது சையிட் முஹமட் அஜ்மி செக் இஸ்மாயில் எனும் அவ்வாடவரின் சடலத்தை கண்டதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற அவ்வாடவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மீன் பிடிக்க சென்றால்,பின்னிரவு அல்லது மறுநாள் தான் அவர் வீடு திரும்புவது வழக்கம் என்பதால், அவரது குடும்பத்தார் அதனை பொருட்படுத்தவில்லை.
மாறாக, சனிக்கிழமை இரவு கிராம மக்கள் சிலர் அவ்வாடவரை உயிருடன் பார்த்துள்ளனர்.
எனினும், ஞாயிற்றுகிழமை அவர் இறந்து கிடக்க காணப்பட்டது தொடர்பில், தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய குவாலா திரங்கானு போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிடெண்டன் வான் முஹமட் ஜாக்கி வான் இஸ்மாயில், சடலம் சவப்பரிசோதனைக்காக சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.