Latest
கூட்டம் நிறைந்த லிப்ட்; உள்ளே நுழைய முடியாமல் தவித்த சக்கர நாற்காலி பயனர் – சமூக வலைதளங்களில் விவாதம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – கோலாலம்பூர் ரயில் நிலையத்தில், கூட்டம் அதிகமாக இருந்ததால் லிப்ட்டில் ஏற முடியாமல் சக்கர நாற்காலியில் ஒருவர் காத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்தப் புகைப்படம் Threads-ல் பகிரப்பட்டு, 41,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றது.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைத் தள்ளுவண்டியுடன் வருபவர்களுக்கு ரயில் நிலைய லிப்ட்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என பலர் தெரிவித்தனர்.
மேலும் உடல் திறன் உள்ளவர்கள் எஸ்கலேட்டரைப் (escalator) பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.



