![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/rib.jpg)
கூலாய், ஜூன் 13 – ஜோகூர், சினாயில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் பதட்டமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
அந்த 55 வயது பெண்ணின் சங்கிலியை ஆடவன் ஒருவன் வழிபறி வாயிலாக, பறித்து செல்ல முயன்றதே அதற்கு காரணம் ஆகும்.
அதனால், தவறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த அப்பெண், கால் எலும்பு முறிவுக்கு இலக்கானதாக, செனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங் (Wong Bor Yang) தெரிவித்தார்.
செனாயில் கடந்த ஆறு மாதங்களில், மூன்று வழிப்பறி சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் வோங் கூறியுள்ளார்.
சம்பவத்தின் போது, கம்போங் செனாய் பாருவிலிருந்து, தாமான் செனாய் உத்தாமா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணமான அப்பெண்ணை, பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர், அவரது சங்கிலியை பிடித்து இடித்துள்ளான்.
அதனால், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அப்பெண், இடது காலில் முறிவுக்கு இலக்கானார்.
அதனால், சம்பந்தப்பட்ட நபரை கைதுச் செய்ய போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வோங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வேளையில், அந்த கொள்ளை சம்பவத்தை உறுதிப்படுத்திய கூலாய் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் டான் செங் லீ (Tan Seng Lee), சம்பந்தப்பட்ட கொள்ளையனை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.