Latestமலேசியா

கூலாயில் விபத்திற்குப் பின் கார் தீப்பற்றியது ; ஆடவர் கருகி மரணம்

கூலாய், மே 30 – விபத்திற்குப் பின் கார்  தீப்பற்றியதில்   அதில் சிக்கிக்கொண்ட  ஓட்டுனரான ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.   இந்த துயரச் சம்பவம்  கூலாய்க்கு அருகே  Plus நெடுஞ்சாலையில்   33.3 ஆவது கிலோமீட்டரில்  நேற்றிரவு மணி 11.24 அளவில் நிகழ்ந்தது.  சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு    ஆறு தீயணைப்பு வீரர்கள்  சென்றடைந்தபோது Produa Myvi  கார்   80விழுக்காடு தீயில் எரிந்துவிட்டதாக  ஜோகூர்  தீயணைப்பு  மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  

 மணல் ஏற்றிச் சென்ற  டிரெய்லர் லோரி, ஒரு புரோட்டோன் ஈஸ்வரா  உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தை தொடர்ந்து  Produa Myvi  கார்  தீப்பற்றியதாக  கூறப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்  விபத்தில் சிக்கிக்கொண்ட மற்றவர்களை பொதுமக்கள் மீட்டனர்.   Perodua Myvi  காரில் தீயில் கருகி மாண்ட ஆடவரின் உடல் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி மீட்கப்பட்ட  பின் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!