Latestமலேசியா

கெடாவில், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடல் கண்டெடுப்பு

பாலிங், நவம்பர் 16 – கெடா, கூபாங், கம்போங் மெங்குவாங் தெங்ஙா கிராமத்திலுள்ள, கிணறு ஒன்றிலிருந்து, மாற்றுத்திறனாளியான மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மணி 4.30 வாக்கில், 80 வயது உமி கல்சோம் ஜாசின் எனும் அம்மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டதை, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சம்சுடின் மாமாட் உறுதிப்படுத்தினார்.

நேற்று நண்பகல் மணி 12.30 வாக்கில், வீட்டின் பின்புறம் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அந்த கிணறுக்கு அருகில் அம்மூதாட்டி புற்களை வெட்டிக் கொண்டிருப்பதை அவரது உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.

எனினும், பின்னர் அவரை காணவில்லை என்பதை அறிந்ததும், கிணற்றுக்கு அருகில் சென்று தேடிய போது, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக, சம்சுடின் சொன்னார்.

தனித்து வாழ்ந்து வந்த அந்த மூதாட்டின் உடலை சோதனையிட்டதில், குற்றவியல் தடயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!