Latestமலேசியா

கெடாவில் கடனுக்கு மதுபானம் கொடுக்க மறுத்த கடைக்காரர்; கட்டையால் வெளுத்து வாங்கிய வாடிக்கையாளர்

பாடாங் செராய், ஜூலை-8, கெடா, பாடாங் செராயில் கடனுக்கு மதுபானம் கொடுக்க மறுத்த கடைக்காரரை, வாடிக்கையாளர் கட்டையால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அச்சம்பவம் ஜூலை 6-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் சுங்கை கராங்ஙானில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஹெல்மட் அணிந்திருந்த ஆடவர், கட்டையுடன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

கடைக்காரரை சரமாரியாகத் தாக்கிய அவ்வாடவர், அங்கிருந்த பொருட்களையும் விட்டு வைக்கவில்லை; அவற்றையும் கட்டையால் அடித்து நொறுக்கினார்.

கடைக்காரர் கீழே விழுந்த பிறகும் கூட அவரை தாக்கி அந்நபர் பின்னர் தப்பியோடி விட்டார்.

கடைக்காரர் போலீசில் புகார் செய்ததையடுத்து, தாக்குதல் நடத்திய ஆசாமி கைதாகியுள்ளார்.

கடைக்காரருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!