குவாலா கெட்டில், டிசம்பர் 29 – கெடா, குவாலா கெட்டில் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, பிரபல “மீஹுன்” தொழிற்சாலை ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையானது.
தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து, அதிகாலை மணி 3.26 வாக்கில், அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை, கெடா மாநில தீயணைப்பு மீட்புப் படையின், நடவடிக்கை பிரிவு உயர் அதிகாரி முஹமட் ரஹிமி அலி தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பாலிங், சுங்கை பெட்டாணி, அமான்ஜெயா, கூலிம் ஹைதெக் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், அதிகாலை மணி 5.20 வாக்கில், தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த தீ விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.