கோலாலம்பூர், நவ 16 – கெடாவில் வெள்ளத்தின் காரணமாக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோத்தா செத்தார் மாவட்டத்தில் தாமான் அமானில் தேசிய தொடக்கப் பள்ளியில் நேற்று மேலும் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டதாக மாநில பேரிடர் நிர்வாக மையத்தின் அதிகாரி முஹம்மட் சுஹைமி தெரிவித்தார். தற்போது 74 குடும்பங்களைச் சேர்ந்த 231 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இதனிடையே பேராவில் இன்னமும் நான்கு நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வெள்ளத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட 52 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் தங்கியிருப்பதாக பேரா மாநில பேரிடர் நிர்வாக செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.