கோலாலம்பூர், பிப் 14 – இன்று அதிகாலையில் கெப்போங் பாருவிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயைத் தொடர்ந்து அந்த உணவகம் சேதம் அடைந்தது. அந்த உணவகத்தில் விடியற்காலை மணி 2.48 அளவில் தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த இரண்டு மாடி உணவகம் சேதம் அடைந்ததோடு அந்த உணவகத்தின் சமையல் அறையின் ஒரு பகுதி எரிந்துவிட்டது. அதிகாலை மணி 3.22 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை. அந்த உணவகம் இருந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பெரிய அளவில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அங்கு தீ பரவியதாக கூறப்பட்டது.
Check Also
Close