கேமரன் மலை , ஜன 21 – கேமரன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்துஜாலான் ஹபு-போ டீ எஸ்டேட் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதிவரை அந்த சாலையின் இரு பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என பகாங் மாநில பொதுப் பணித்துறையின் இயக்குனர் டத்தோ இர் ஹபிசா ஜகாரியா தெரிவித்தார். சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்த சாலை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாற்று சாலை திறக்கப்படவில்லை. நிலச்சரிவு நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை மற்றும் அவ்வப்போது தெரிவிக்கப்படும் உத்தரவை பின்பற்றும்படி சாலையை பயன்படுத்துவோரை கேமரன் மலை பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டது.